Breaking News

Gisborne இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு‌ சம்பவத்தில் மூவர் காயம் - 18 வயது இளைஞன் கைது...!!

Gisborne இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு‌ சம்பவத்தில் மூவர் காயம் - 18 வயது இளைஞன் கைது...!!

நேற்றிரவு Gisborne இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண், ஒரு சிறுமி மற்றும் ஒரு இளைஞர் காயமடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் சாம் அபெரஹாமா கூறுகையில்..

தொட்டாரா தெருவில் உள்ள ஒரு இடத்தில் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் அதிக அளவில் கூடி இருந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் வந்ததாக கூறினார்.

அந்த நேரத்தில் ஒரு வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு இளைஞர், 12 வயது சிறுமி மற்றும் ஒரு இளம் பெண் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து Gisborne மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

"இந்த சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் ஏற்படுத்தும் துயரத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் குற்றவாளிகளை கைது செய்ய நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என உள்ளூர் மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அபெரஹாமா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இச் சம்பவத்தை அடுத்து பொலிஸார் குறித்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 18 வயது இளைஞன் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு Gisborne மாவட்ட நீதிமன்றத்தில் அக்டோபர் 3 ஆம் திகதி ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.