Breaking News

என்னை கைதுசெய்ய திட்டமிட்டுள்ளனர்- வெள்ளை பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய துசான்

என்னை கைதுசெய்ய திட்டமிட்டுள்ளனர்- வெள்ளை பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய துசான்

வெள்ளை பூண்டு மோசடி சமையல் எரிவாயு மோசடி போன்றவற்றை அம்பலப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசான் குணவர்த்தன தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.

நான் வெளிநாடு செல்ல முயன்றவேளை என்னை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தினார்கள் - மோசடிகள் குறித்து முறைப்பாடு செய்த நான் இன்று சந்தேகநபராக மாற்றப்பட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
என்னை கைதுசெய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்  சில அமைச்சர்கள் இதன் பின்னணியில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்