Breaking News

இந்தியாவில் மீண்டும் கொரோனா அச்சம்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா அச்சம்!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.62 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.21 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,280 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,34,301 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  5,52,566 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 94.11% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.55% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  6,30,54,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.