Breaking News

நாக சைதன்யாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? - சமந்தாவே சொன்ன ஷாக் நியூஸ்..!

நாக சைதன்யாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? - சமந்தாவே சொன்ன ஷாக் நியூஸ்..!

நடிகை சமந்தா தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்து சில வருடங்களின் பின் அவர்கள் இரு வீட்டார் சம்மதுத்தடன் திருமணம், செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது.

ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்திருக்கும் பதில் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவரிடம், 'தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக மாற்ற விரும்பினால், நீங்கள் ப்ளூப்பராக எதை நினைத்து சிரிப்பீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் என்ன' என்ற கேள்வியை ரசிகர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சமந்தா, "எனது விருப்பு வெறுப்புகளை அறியாமல் இருந்ததுதான் எனது வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அப்போது எனக்கு இருந்த துணையின் தாக்கம் என்னை அதிக அளவு பாதித்தது. மிகக் கடினமான நேரத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது என்பதை நான் உணர்ந்தபோதுதான் நான் தனிப்பட்ட வளர்ச்சியை பெற்றேன்" என்று குறிப்பிட்டார்.

சமந்தாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், துணையின் தாக்கம் என்னை அதிக அளவு பாதித்தது என்று சமந்தா சொல்லியிருப்பதன் மூலம் தன்னை நாக சைதன்யா முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை மறைமுகமாக சொல்கிறாரா. இதனால்தான் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.