Breaking News

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா? - இது என்ன புது கதையா இருக்கு..!

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா? - இது என்ன புது கதையா இருக்கு..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த இருபது வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார்.

கடந்தாண்டு ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமானார் நயன்தாரா. என்னதான் நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் வெற்றிபெற்றாலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் வேறெந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

என்னதான் நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அவரின் சம்பளம் மட்டும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறதாம். குறிப்பாக ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாராவின் சம்பளம் மேலும் உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் நயன்தாராவின் சம்பளமே அவருக்கு தற்போது பாதகமாக முடிந்துள்ளதாக தெரிகின்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் எல்.ஐ.சி. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நாயகியாக க்ரிதி ஷெட்டி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன.

பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா இப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படத்திலிருந்து நயன்தாரா விலகியதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. நயன்தாராவின் சம்பளம் தயாரிப்பாளருக்கு கட்டுப்படியாகாததால் இப்படத்திலிருந்து நயன்தாரா விலக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இருந்தாலும் இத்தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை.

இந்நிலையில் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விக்னேஷ் சிவன் படத்தில் நயன்தாரா இல்லாமல் இருப்பாரா? கண்டிப்பாக இருப்பார். இதெல்லாம் வெறும் வதந்திதான் என்கின்றனர். எனவே நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகினாரா இல்லையா என்பது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.