Breaking News

எங்க படத்தோட கதை மேல யாரும் கேஸ் போட முடியாது - தில்லாக சொன்ன வெங்கட் பிரபு...!!

எங்க படத்தோட கதை மேல யாரும் கேஸ் போட முடியாது - தில்லாக சொன்ன வெங்கட் பிரபு...!!

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ஆனால் அவர் தான் ஒரு முன்னணி இயக்குனர் என நினைக்காமல் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். அதுதான் வெங்கட் பிரபுவிற்கு அதிகளவில் ரசிகர்களை பெற்று தந்துள்ளது என்றே சொல்லலாம். திரைத்துறையில் இருக்கும் அனைவரிடமும் எந்த ஈகோவும் இன்றி பழகி வருவார் வெங்கட் பிரபு.

இந்நிலையில் தற்போது விஜய்யை வைத்து the greatest of all time என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு ஜூன் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபுவின் படம் மட்டுமல்லாமல் அவரின் ப்ரோமோஷன் டெக்னீக்கும் சற்று வித்யாசமான ஒன்றாகவே இருக்கும்.

அவரின் முதல் படமான சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஒரு படம் போல இல்லாமல் மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வெங்கட் பிரபு ஒரு விஷயம் செய்துள்ளார். படம் வெளியாகும் முன்பு நடந்த ஒரு ப்ரீஸ் மீட்டில் வெங்கட் பிரபு பேசும்போது, எங்க படத்தின் கதை என்னுடையது என யாரும் வழக்கு போட முடியாது. ஏனென்றால் எங்கள் படத்தில் கதையே கிடையாது என கூறினார்.

இதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள். ஒரு இயக்குனர் தன் முதல் படத்திலேயே கதை இல்லை என தைரியமாக பேசுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலர் தெரிவித்தனர். என்னதான் சென்னை 28 படத்தில் கதை இல்லையென்றாலும் திரைக்கதையில் தான் யார் என நிரூபித்திருப்பார் வெங்கட் பிரபு.

இந்நிலையில் the greatest of all time திரைப்படத்தில் விஜய்யை வித்யாசமாக காட்டி ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை வெங்கட் பிரபு தருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.