Breaking News

அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் தொட்டியை சரிபார்க்கவும்- RDA

அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் தொட்டியை சரிபார்க்கவும்- RDA

அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைவதற்கு முன்னர், போதிய எரிபொருள் உள்ளதா என மதிப்பிடுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ( RDA ) வாகன சாரதிகளிடம் கோரியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் எரிபொருள் இன்மையால் வாகனங்கள் தேங்கி நிற்கும் சம்பவங்கள் குறித்து பராமரிப்புப் பிரிவினரிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படாமல், ஏனைய வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல், இலக்குகளை அடைவதற்கு போதுமான எரிபொருள் உள்ளதா என்பதை வாகன சாரதிகளை அளவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் எரிபொருளை வழங்குவதால், வாகன சாரதிகளை எரிபொருளின் அளவு குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல சிரமங்களுக்கு மத்தியில் பராமரிப்பு பிரிவும் இயங்கி வருகிறது.

எனவே, விபத்து ஏற்பட்டால் ஒரு இடத்தை அடைவதற்கும், மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வளங்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரிவுகள் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பழுதடைந்த வாகனத்தை பராமரிக்கும் அலுவலர்கள் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், டயர்கள் மற்றும் டூல் கிட்கள் குறித்து வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.