Breaking News

மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடலாமை

மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடலாமை

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று வியாழக்கிழமை மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாவத்துறை கடற்கரையில் கரையொதுங்கியது.