Breaking News

இலங்கையின் வவுனியாவில் PHI மீது தாக்குதல் - வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி

இலங்கையின் வவுனியாவில் PHI மீது தாக்குதல் - வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் (PHI) மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாது சைக்கிளில் பயணித்த  25 வயதான இளைஞர் ஒருவரை முகக்கவசத்தை அணியுமாறு பொது சுகாதார பரிசோதகர் அறிவித்த போது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான பொது சுகாதார பரிசோதகர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.