Breaking News

உலகம் மற்றுமொரு போரை தாங்காது - கவலை வெளியிடும் சர்வதேச அமைப்புகள்...!!

உலகம் மற்றுமொரு போரை தாங்காது - கவலை வெளியிடும் சர்வதேச அமைப்புகள்...!!

இஸ்ரேல் - ஈரான்(Israel - Iran) இடையேயானா முறுகல் நிலையானது சர்வதேச அரசியல் பொருளாதார அரங்கங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ மற்றுமொரு போரை தாங்காது” என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் (António Guterres)கவலை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் எதிர் தாக்குதலை மேற்கொண்டன.

இந்த தாக்குதல் 3ஆம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என அச்சநிலை எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், “அமைதியை நிலைநாட்ட வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது பிராந்திய அமைதியாக இருக்கட்டும்.

அல்லது சர்வதேச அமைதி, பாதுகாப்பாக இருக்கட்டும். ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பு இப்போது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தத் தருணத்தில் மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது.

மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் விளிம்பில் நிற்கிறது. அந்தப் பிராந்திய மக்கள் முழு வீச்சு போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர். இத்தருணத்தில் உடனடியாக பதற்றத்தை தணிக்க வேண்டும்.

இது போரில் இருந்து விலகி நிற்பதற்கான தருணம். பழிக்குப் பழி என இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலைக் கண்டிக்கிறோம்.

வெறுப்புகளை முன்னெடுக்காமல் நிறுத்துங்கள். அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். எந்த ஒரு பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கும் அல்லது ஒரு நாட்டுக்கும் எதிராக பலத்தை பிரயோகிக்காதீர்கள்.

அதேபோல் இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்திவிட்டு எந்தவித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகள் விடுவிக்க வேண்டும். காசாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வர நமக்கு பொறுப்புள்ளது.

அங்கு தடையில்லாது மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். மேற்கு கரை பதற்றத்தைத் தணிக்க வெண்டும். செங்கடலில் அச்சமற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.