Breaking News

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்...!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்...!!

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது. விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுமார் 18,115 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, 688 பட்டதாரி பயிற்சி பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீப காலத்துடன் ஒப்பிடுகையில், விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது, விமான நிறுவனத்தால் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச விண்ணப்பங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.