Breaking News

பதவி விலகினார் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர்...!!

பதவி விலகினார் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர்...!!

இலங்கை

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை நேற்று (08) பதவி விலகல் செய்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இம்மாதம் 11ஆம் திகதி புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.