Breaking News

இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு...!!

இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு...!!

இலங்கை

இலங்கை மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தி தபால் தலைகளை உருவாக்க முடியும். 2000 ரூபா செலவில் 20 முத்திரைகள் அடங்கிய தாள் வழங்கப்படும்.

இலங்கையில் இந்த முத்திரைகளை வழமையான முத்திரைகளாகப் பயன்படுத்த முடியும். இத்தகைய முத்திரைகள் பிறந்தநாள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்படலாம்.

அதே நேரத்தில் அவற்றை திருமண அழைப்பிதழ்களை இடுகையிடவும் பயன்படுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.