Breaking News

அந்த படத்துல நான் நடிச்சது தான் தப்பு - உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்...!!

அந்த படத்துல நான் நடிச்சது தான் தப்பு - உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்...!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் அயலான். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல தடைகளை தாண்டி இப்படம் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அயலான் வித்யாசமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமாவிற்கு ஏலியன் கதைக்களத்தில் ஒரு படம் வெளியாவது இதுவே முதல் முறை. எனவே இப்படத்தை குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அனைத்து வகையான ரசிகர்களும் இப்படத்தை ரசித்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்னதான் அயலான் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் ஜனவரி 12 ஆம் திகதி அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை பற்றி சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பிரின்ஸ் படத்தில் நான் நடிக்காமல் வேறொரு புது நடிகர் நடித்திருந்தால் அப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கும் என நம்புகின்றேன்.

நான் பிரின்ஸ் படத்தில் நடித்ததால் தான் கலவையான விமர்சனங்கள் வந்தது. ஒரு புது நடிகர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ஓப்பனாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.