Breaking News

தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாதீங்க - விசித்ராவை கண்டித்த போட்டியாளர்..!

தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாதீங்க - விசித்ராவை கண்டித்த போட்டியாளர்..!

பிக் பாஸ் சீசன் 7 முடிவடைய இரன்டு வாரங்களே உள்ளது. 90 நாட்களை கடந்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டிக்கெட் டு பைனல் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகின்றார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது.

நிக்சன், மாயா, ரவீனா ஆகியோர் இந்த வாரம் குறையான வாக்குகளை பெற்று கடைசி இடங்களில் இருப்பதாக தகவல்கள் வந்தன. எனவே மாயா அல்லது நிக்சன் ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவீனா தான் இந்த வாரம் வெளியேற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்ற போட்டியாளராக இருப்பது அர்ச்சனா மற்றும் விசித்ரா தான்.ஆரம்பத்தில் விசித்ரா ஒரு சில வாரங்கள் தான் தாக்குபிடிப்பார் என ஒரு சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை விசித்ரா வலுவான போட்டியாளராக இருந்து வருகின்றார்.

ஆனால் அவர் செய்யும் சில செயல்கள் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. விசித்ரா மற்றும் தினேஷ் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. இவர்களின் மோதல் தற்போது உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றைய எபிசோடில் விசித்ரா கேமராவை பார்த்து, இவருடன் போட்டியாளர்களே ஒன்றாக இருக்கமுடியல, எப்படி இவருடன் ஒன்றாக வாழ்வதோ? தயவுசெய்து திரும்பி வந்துறாத என பேசியுள்ளார் விசித்ரா.

அவர் ரச்சிதா பற்றி தான் பேசியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து மணி விசித்ராவிடம், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாதீங்க, அது தப்பு என கண்டித்துள்ளார். ஆனால் விசித்ரா இதையெல்லாம் கண்டுகொள்ளாது மீண்டும் தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தான் பேசுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தினேஷை மட்டுமல்லாமல் விஷ்ணு, ரவீனா போன்ற மற்ற போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் விசித்ரா பேசியுள்ளார். இந்நிலையில் அர்ச்சனாவை தொடர்ந்து விசித்ரா கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வார் என அனைவராலும் கணிக்கப்பட்டு வருகின்றது. தினேஷ், அர்ச்சனா, விசித்ரா போன்ற போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு வந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.