Breaking News

வாடிய முகம்;கண்ணில் தெரிந்த சோகம்! சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்தை மறக்காத விஜய் - நேரில் அஞ்சலி...!!

வாடிய முகம்;கண்ணில் தெரிந்த சோகம்! சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்தை மறக்காத விஜய் - நேரில் அஞ்சலி...!!

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (28) காலை உயிரிழந்தார். இதனையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அங்க அசைவுகள் இல்லாமல் துயில் கொண்டிருந்த  விஜயகாந்தின் பூதஉடலைக் கண்டு தீரா துன்பம்  அடைந்த விஜய் கண்ணீர் வடித்து தனது மன வலியை வெளிப்படுத்தினார்.
நடிகர் விஜயகாந்த் உடன் சில படங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ‘செந்தூரப்பாண்டி’ படத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை சக்சஸ் பெற்றது. இதனை அவரே வீடியோ பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். அதேபோல விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.