Breaking News

தூங்கவிடாமல் 12 மணிநேரம் பாடம் எடுத்த விக்னேஷ் சிவன் - மிரண்டுபோன SJ சூர்யா மற்றும் பிரதீப்...!!!

தூங்கவிடாமல் 12 மணிநேரம் பாடம் எடுத்த விக்னேஷ் சிவன் - மிரண்டுபோன SJ சூர்யா மற்றும் பிரதீப்...!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் அவரது இரண்டாவது படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி செட்டி நடக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் எல்ஐசி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. படத்தின் பெயரே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது. கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.

இந்த எல்ஐசி படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த வகையில் எஸ் .ஜே.சூர்யா எல்ஐசி படம் குறித்தும் எல்ஐசி படத்தின் வேலை குறித்தும் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது...

எல்ஐசி, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் பெயர் எவ்வளவு உற்சாகத்தை கிளப்புகிறதோ அதே போல இந்த படமும் இருக்கும். நேற்று மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை கிட்டத்தட்ட 12 மணி நேரங்களுக்கு எங்களுக்கு எல்ஐசி படத்திற்காக பயிற்சி பட்டறை நடைபெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நான் என மூவரும் நேற்று சிறப்பான நேரத்தை கொண்டிருந்தோம். இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகவும் அதிக கவனத்துடன் இந்த படத்தில் புதுக்கால காதல் உலகிற்கு எங்களை எடுத்துச்செல்ல செயல்படுகிறார் என்பது தெரிகிறது. இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. என எல்ஐசி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை நடிகர் எஸ்.ஜேசூர்யா அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.