கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் பெருமையாக வலம் வருகிறார் ஏஆர் ரஹ்மான்.
படங்களுக்கு இசையமைப்பது, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு நெட்டிசனின் டிவிட்டர் பதிவில், "நமக்கெல்லாம் ஒரு நண்பன் இருப்பார், அவர் இந்த உலகத்திலேயே மிக மோசமான நேரத்தில் உறங்கச் செல்வார். சூரியன் உதிக்கும் போது எல்லோரும் எழுந்திருக்கும் நேரம் அவர் மட்டும் படுக்கைக்கு போவார்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஷேர் செய்துள்ள ஏஆர் ரஹ்மான், "யாருப்பா அது?" என ஸ்மைலி கேப்ஷனுடன் டிவிட் போட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் எப்போதும் இரவில் தான் இசையமைப்பார். அதனால் அவரை சந்திக்க செல்லும் இயக்குநர்களுக்கு இரவில் தான் அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமாம்.
ரோஜா படத்திற்கு இசையமைக்கத் தொடங்கியது முதலே இரவில் வேலை பார்ப்பதை தான் விரும்புகிறார் ஏஆர் ரஹ்மான்.
அதனால், டிவிட்டரில் அந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளது நான் தான் என மறைமுகமாக குறிப்பிட்டு தன்னையே கலாய்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அது நீங்க தான் எஜமான் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல், இத்தனை வருசமா உங்களுக்கு இந்த பழக்கம் போகவில்லையா எனவும் கேட்டுள்ளார்.