Breaking News

சசிகலாவை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சியில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சசிகலாவை  அரசியலுக்குள் இழுக்கும் முயற்சியில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் , அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கப்போவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதரவாளர்கள் 6 பேர் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு இவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் வலியுறுத்தியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை