Breaking News

ஜெயலலிதா ஆட்சியில் பெண் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருக்குமா? - திமுக அரசை விமர்சித்த சசிகலா...!!

ஜெயலலிதா ஆட்சியில் பெண் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருக்குமா? - திமுக அரசை விமர்சித்த சசிகலா...!!

இந்தியா: தமிழ்நாடு

சென்னையில் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, மாணவிகள் போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உடனே விசாரித்து, தவறு இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றோ தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. பெண்களை கடவுளாக வணங்குகின்ற நம் தமிழ் மண்ணில், பெண்ணினத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.