Breaking News

நாளை O/L பரீட்சை ஆரம்பம்

நாளை O/L பரீட்சை ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேடமாக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் 622,352 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.