Breaking News

கொரோனாவால் அதிரும் அமெரிக்கா - 5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

கொரோனாவால் அதிரும் அமெரிக்கா - 5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருகிறது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
 
இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 58,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,83,76,656 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1573 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,99,777 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.84 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.