Breaking News

ஜனாஸா தகனம் விவகாரம்; அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்! ஐ.நா வலியுறுத்தல்!

ஜனாஸா தகனம் விவகாரம்; அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்! ஐ.நா வலியுறுத்தல்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் சடலங்களை கட்டாயம் தகனம் செய்யும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுளின் நான்கு விசேட நிபுணர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான அறிக்கை நேற்று (25) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் தனது கொள்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

புதைக்கப்படும் சடலங்களால் கொவிட் 19 போன்ற சமூகத்தில் பரவக்கூடிய வைரஸ்கள் மேலும் தொற்றை ஏற்படுத்துவதற்கான அபாயம் குறித்து எந்தவித மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது, மனித உரிமை மீறலுக்கு நிகரான விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதின் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியே இலங்கை அரசாங்கம் சடலங்களை தகனம் செய்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. எனினும், சடலங்களை புதைப்பதின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.