Breaking News

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் கை இல்லாத சடலம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் கை இல்லாத சடலம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லி என்ற இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது தடுப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு தடுப்புக் கம்பியில் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டனர்.

அவரின் ஒரு கை வெட்டப்பட்டிருந்தது.போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.