Breaking News

11 ஆண்டு காத்திருப்பு - ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு குழந்தை பிறந்தது...!!

11 ஆண்டு காத்திருப்பு - ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு குழந்தை பிறந்தது...!!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ராம் சரண், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதனிடையே ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகள் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து கர்ப்பிணியான உபாசனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், சானியா மிர்சா மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை ராம்சரணின் மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 11 ஆண்டு கால கத்திருப்புக்கு பின் ராம் சரண் தந்தையாகி உள்ளதால், அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.