இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் 8 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் தனது பிறந்த நாளை கொண்டாட இத்தாலி நாட்டுக்கு அவர் சுற்றுலா சென்று உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய புகாரின் பேரில் ஜுகு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பொலிஸார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.