Breaking News

ஆச்சர்யம் அளித்த ஷாருக்கான் - நடிகை பிரியாமணி நெகிழ்ச்சி..!!

ஆச்சர்யம் அளித்த ஷாருக்கான் - நடிகை பிரியாமணி நெகிழ்ச்சி..!!

நடிகை பிரியா மணி தமிழின் மிகவும் முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான கஸ்டடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் பிரியா மணி.

இந்நிலையில், ஜவான் படத்தின் முதல்நாள் சூட்டிங்கில் பங்கேற்ற அவரை ஷாருக்கான் அடையாளம் கண்டுக் கொண்டு உற்சாகத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாராம்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷாருக்கான் கூறியுள்ளார்.

இதனால் பிரியாமணி மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னை ஷாருக்கான் நியாபகம் வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.