Christchurch இல் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையை தொடர்ந்து கடந்த வாரம் 1 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள MDMA போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சமூகத்தில் சட்டவிரோதமான போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விற்பனையை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த வாரம் திங்கட்கிழமை Christchurch நகரில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 4700 கிராமுக்கும் மேற்பட்ட B வகுப்பு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டேரின் தாம்சன் தெரிவித்தார்.
இதன் மதிப்பு 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்
இதனையடுத்து போதைப்பொருளை இறக்குமதி செய்ததாக 31 மற்றும் 36 வயதுடைய மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் அவர்களை ஜூன் மாதம் Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலும் போதைப்பொருட்களை நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்த நாடுகளை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.