GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து குறித்து செய்யாறு பாலு பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது. இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.
பாலு, “ ஜிவி பிரகாஷ் வீட்டில், அப்பா மற்றும் தங்கை பாவணி ஸ்ரீ ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி குடும்பமாக வாழ்வது சைந்தவிக்கு பிடிக்கவில்லை. மாறாக கணவன் - மனைவி வீட்டிலிருந்து யார் வந்தாலும் மனைவிக்கும், கணவனுக்கும் சண்டை வருவது வழக்கம்.
இது போல் தான் இவர்கள் வீட்டிலும் சண்டை ஆரம்பித்தது. இந்த செய்தி ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.