குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக குவைத் அரசாங்கம் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் பலர் கைது செய்துள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காரணமாக மனிதக் கொலை மற்றும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குவைத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் பல்வேறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக குவைத் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.