Breaking News

Hawke's Bay பிராந்திய சிறையில் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்திய ஆறு இளைஞர்கள் மீது காவல்துறை குற்றச்சாட்டு...!!!

Hawke's Bay பிராந்திய சிறையில் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்திய ஆறு இளைஞர்கள் மீது காவல்துறை குற்றச்சாட்டு...!!!

இரண்டு மாதங்களுக்கு முன்பு Hawke's Bay பிராந்திய சிறையில் இளைஞர் பிரிவில் நடந்த போராட்டம் தொடர்பாக ஆறு இளைஞர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் Hastings இற்கு அருகிலுள்ள சிறைச்சாலையில் ஆறு கைதிகள் சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர்.

அவர்கள் சுமார் 24 மணி நேரம் அங்கேயே இருந்தனர் - உரக்க கத்தி கீழே வர மறுத்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது கலவரம், சேதப்படுத்துதல் மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இவர்களில் 18 வயதுடைய நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் மாதம் ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய ஐந்து பேர் நவம்பர் மாதம் ஹேஸ்டிங்ஸ் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதம் காரணமாக இளைஞர் பிரிவு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.