Breaking News

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்...!!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்...!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி (70) கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்றைய தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகேஷ் பாபுவின் தாயார் காலமானதை தொடர்ந்து நடிகர், நடிகைகள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வரும் நிலையில் அவரது இறுதிச் சடங்குகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் நாளை மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.