Breaking News

சீனாவில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பு - உணவகம் இடிந்து விழுந்து 16 பேர் பலி...!!!

சீனாவில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பு - உணவகம் இடிந்து விழுந்து 16 பேர் பலி...!!!

சீனாவில் கேஸ் வெடித்து உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் அரசு அலுவலகத்தின் வளாகத்தில் இயங்கி வந்த உணவகத்தில் கேஸ் கசிவால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு, உணவகம் இடிந்து விழுந்தது.

இதில் குறித்த உணவகத்தில்  உணவு அருந்தி கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விடியவிடிய நடந்த மீட்பு பணிகள் நேற்று அதிகாலை முடிவுக்கு வந்தது. இதில் இடிபாடுகளில் இருந்து மேலும் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.