Breaking News

காலியின் சில இடங்களுக்கு பயணக் கட்டுப்பாடு

காலியின் சில இடங்களுக்கு பயணக் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் பரவலையடுத்து காலி நகரசபைக்குட்பட கடுகொட பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளதாக, காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகொட பரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதியில் மூன்று இடங்களில் வீதித்தடைகள் இடப்பட்டு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன்,  காலி நகர சபைக்குட்பட்ட மேலும் 07 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் இவ்வாறு பயணக் கட்டுபாடு  விதிக்கப்படுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.