Breaking News

தப்பியோடியவர் மருதானையில் பிடிபட்டார்

தப்பியோடியவர் மருதானையில் பிடிபட்டார்

 

வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தலைமறைவான கொரோனா தொற்றாளர் ஒருவர், மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

 

வைத்தியசாலையில் போலி முகவரியை வழங்கியுள்ள குறித்த தொற்றாளர் நேற்று மாலை வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியிருந்தார்.

 

இவரைக் கண்டுபிடிப்பதற்காக  பொலிஸ் ஊடகப் பிரிவு இவரது புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.