Breaking News

அப்துல்லா மஹ்ரூப் விளக்கமறியலில்

அப்துல்லா மஹ்ரூப் விளக்கமறியலில்

 

நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவர் நாளை (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (15) காலை 6.30க்கு இவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.