Breaking News

மைல்ஸில் நபர் ஒருவரின் திடீர் மரணம் - விசாரணையில் பொலிஸார்

மைல்ஸில் நபர் ஒருவரின் திடீர் மரணம் - விசாரணையில் பொலிஸார்

மைல்ஸில் (Miles) 51 வயதான ஒரு நபரின் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒரு நலன்புரி சோதனை நடத்த அதிகாரிகள் லேகாக் (Laycock) சாலை முகவரிக்கு அழைக்கப்பட்டதாக குயின்ஸ்லாந்து காவல்துறை இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

51 வயதான நபர் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

குறித்த நபரின் மரணத்தின் பின்னனி குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.