Breaking News

போதை பொருள் புகைத்த கிறிஸ்ட்சர்ச் உயர்நிலைப் பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதி

போதை பொருள் புகைத்த கிறிஸ்ட்சர்ச் உயர்நிலைப் பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதி

கிறிஸ்ட்சர்ச் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் ஒரு மாணவர் குழுவினருடன் செயற்கை போதை பொருளை புகைத்ததை தொடர்ந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் காலை 11.20 மணியளவில் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள வாட்டர்லூ வீதியில் உள்ள ஹார்ன்பி உயர்நிலைப் பள்ளிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு மாணவர் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று செயின்ட் ஜான் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ஹார்ன்பி உயர்நிலைப் பள்ளி முதல்வர் ராபின் சுட்டன் மற்றும் வாரியத் தலைவர் கேய் பேங்க்ஸ் சார்பாக ஒரு அறிக்கையில்,பள்ளி மைதானத்தில் ஒரு "சிறிய குழு மாணவர்கள்" செயற்கை போதைப்பொருள் புகைத்த சம்பவம் நடந்ததாக பள்ளி உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவத்தின் விளைவாக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.