Breaking News

மெத்தாம்பேட்டமைன் தொடர்பான குற்றச்சாட்டில் அதிரடி கைதுகள்

மெத்தாம்பேட்டமைன் தொடர்பான குற்றச்சாட்டில் அதிரடி கைதுகள்

தெற்கு கேன்டர்பரியில் (South Canterbury) இரண்டு நாள் நடவடிக்கையைத் தொடர்ந்து மெத்தாம்பேட்டமைன் (ஒரு வகை போதைப்பொருள்) தொடர்பான குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராக்கி (Aoraki) பகுதி தளபதி இன்ஸ்பெக்டர் டேவ் காஸ்கின் இதுவரை பல தேடல் வாரண்டுகள் நிறைவேற்றப்பட்டதாகவும், இதனிடையே 15 பேர் பல்வேறு மெத்தாம்பேட்டமைன் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மெத்தாம்பேட்டமைனின் சரியான அளவு மற்றும் அதன் மதிப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, என்றார்.

மேலும் ஏழு தேடல் வாரண்டுகள் நேற்றையதினம்  நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் மேலும் கைதுகள் எதிர்பார்க்கப்படுவதாக காஸ்கின் தெரிவித்தார்.

ஆறு வாரங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கையில், மூன்று பொலிஸ் நாய் பிரிவுகளும், திமாரு மற்றும் கிறிஸ்ட்சர்ச் அதிகாரிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.