Breaking News

அரிசி பற்றாக்குறை : 01 மாத கால அரிசியே கையிருப்பில் : அமைச்சர் பந்துல

அரிசி பற்றாக்குறை : 01 மாத கால அரிசியே கையிருப்பில் : அமைச்சர் பந்துல

நாட்டில் தற்போது சுமார் 1 மாத கால நுகர்வுக்கு மட்டுமே அரிசி இருப்பு உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஆலை உரிமையாளர்கள் வழங்கிய புள்ளிவிவரங்களுடன், எதிர்வரும் நாட்களில் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார். 

எனவே, உடனடியாக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.