Breaking News

வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் பங்கேற்றனர்.

சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை(ஜூன் 26)  ஒட்டி சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எனினும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொலிஸார்  நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது. 

இதனிடையே வெலிக்கடை சிறைச்சாலையின் சில கைதிகள் இன்று கூரை மீது ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். 

கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டதைப்  போன்று தமக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரிஅவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.