Breaking News

கொரோனாவுக்கு பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்

கொரோனாவுக்கு பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்

தாய், தந்தை, மகன் மூவரும் கொரோனாவால் மரணித்த சம்பவம் பேராதனை முருத்தலாவை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பேராதனை பொது சுகதார அதிகாரி கபில விக்கரமநாயக்கா தெரிவித்தார்.

பேராதனை முருத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகளான சிரிபால ராஜபக்க்ஷ (72) என்பவர் கடந்த 3 ஆம் திகதியும் சீலா ராஜபக்க்ஷ (70) என்பவர் 14 ஆம் திகதியும், அவர்களது புதல்வரான தம்மிக்க ராஜபக்ஷ (38) கடந்த 23 ஆம் திகதியும் மரணித்துள்ளனர். இவர்கள் மூவரும் கொவிட்-19 தொற்று காரணமாகவே மரணித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.