தாய், தந்தை, மகன் மூவரும் கொரோனாவால் மரணித்த சம்பவம் பேராதனை முருத்தலாவை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பேராதனை பொது சுகதார அதிகாரி கபில விக்கரமநாயக்கா தெரிவித்தார்.
பேராதனை முருத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதிகளான சிரிபால ராஜபக்க்ஷ (72) என்பவர் கடந்த 3 ஆம் திகதியும் சீலா ராஜபக்க்ஷ (70) என்பவர் 14 ஆம் திகதியும், அவர்களது புதல்வரான தம்மிக்க ராஜபக்ஷ (38) கடந்த 23 ஆம் திகதியும் மரணித்துள்ளனர். இவர்கள் மூவரும் கொவிட்-19 தொற்று காரணமாகவே மரணித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.