Breaking News

மத்திய வெலிங்டனில் நடந்த தாக்குதலின்பேரில் ஒருவர் கைது

மத்திய வெலிங்டனில் நடந்த தாக்குதலின்பேரில் ஒருவர் கைது

கடந்த வார இறுதியில் மத்திய வெலிங்டனில் நடந்த தாக்குதலில் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதையடுத்து 20 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் தாக்கி காயமடையச்செய்ததாக குறித்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை நியூ வேர்ல்ட் சாஃபர்ஸில் உள்ள கார்பார்க்கில் இந்த தாக்குதல் நடந்தது.

துப்பறியும் சார்ஜென்ட் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் கூறுகையில், பொலிஸாரும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் குற்றவாளியை கைதுசெய்ய பொதுமக்களால் வழங்கப்பட்ட உதவிகளுக்கும் வழங்கப்பட்ட தகவல்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.