அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ, எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ,பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளும் பசில் ராஜபக்ஸ, அன்றைய தினமே பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி அமைச்சராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக லங்கா தீப இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதுடன், அந்த இடத்திற்கு பசில் ராஜபக்ஸ வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையின் பிரகாரமே, பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளார்.