Breaking News

நாகேரில் (Ngahere) நடந்த கொள்ளை சம்பவத்தில் ஆயுதமேந்திய போலீசாரால் ஒருவர் கைது

நாகேரில் (Ngahere) நடந்த கொள்ளை சம்பவத்தில் ஆயுதமேந்திய போலீசாரால் ஒருவர் கைது

West Coast இல் கிரேமவுத் பகுதியில் (Greymouth) ஒரு தெருவில் ஆயுதமேந்திய போலீசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த நபரை இன்று மாலை 4.30 மணியளவில் ஒரு குடியிருப்பு பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

நேற்றையதினம் மாலை ஒரு நாகேரில் (Ngahere) ஒரு வீட்டில் நடந்த மோசமான கொள்ளை தொடர்பாக இந்த கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆயுத அதிகாரிகள் டிக்சன் பூங்காவிலிருந்து ராலே செயின்ட் வரை கோப்பர் ஸ்ட்ரீட்டை சுற்றிவளைத்ததுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கொள்ளை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.