Breaking News

இரண்டு சாலை விபத்து - இருவர் மரணம்

இரண்டு சாலை விபத்து - இருவர் மரணம்

நேற்றிரவு ஹாக்ஸ் விரிகுடா மற்றும் வைகாடோவில் (Waikato) வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஹேஸ்டிங்ஸ் மாவட்டத்தின் மரேககாஹோவில் மாநில நெடுஞ்சாலை 50 இல் லாரி மோதியதில் ஒரு பாதசாரி இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் வைபா மாவட்டத்தில் வாரேபாபா தெற்கில் (Wharepapa South) வைபாபா சாலையில் முன்பு ஒற்றை வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இரண்டு விபத்துக்கள் நடந்த சாலைகளும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல வேறு பாதைகளில் திசை திருப்பப்படுகின்றன.

விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.