தெற்கு ஆக்லாந்தில் எரியும் காரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணை கொலை செய்ததாக பால்மர் எட்வர்ட் மார்ஸ்டர்ஸ் ஆக்லாந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆடியோ காட்சி இணைப்பு வழியாக சுருக்கமாக ஆஜரானார்.
கடந்த ஆண்டு நவம்பரில் 23 வயதான சோன்டல் விக்கி-ஓ பிரையன் என்ற பெண்னைகொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது உடலை அவரது காரின் பயணிகள் இருக்கையில் விட்டுவிட்டு தீ வைப்பதற்கு முன்பு, மாஸ்டர்ஸ் அவளை குறைந்தது மூன்று முறை கத்தியால் குத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் இருவரும் சுமார் ஐந்து மாதங்களாக உறவில் இருந்தவர்கள் எனவும் இருவருக்கிடுயில் கடுமையான வாக்குவாம் இருந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.