உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது.
இந்நிலையில் ”கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தாம் எடுத்து கொள்ளப்போவதில்லை” என பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பு மருந்தை எடுத்து கொள்வதும் கொள்ளாததும் தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.