Breaking News

ஜெயிலர் பார்ட் 2 - நெல்சனின் மாஸ்டர் ப்ளான்..!!

ஜெயிலர் பார்ட் 2 - நெல்சனின் மாஸ்டர் ப்ளான்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன் திலீப்குமார் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகிய  6 நாட்களில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையெல்லாம் பார்த்த நெல்சன் அடுத்து மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளாராம். அதாவது ஜெயிலர் 2ம் பாகம் எடுக்க ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் வெளியான பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார் நெல்சன். அப்போது ஜெயிலர், பீஸ்ட், டாக்டர் படங்களின் 2ம் பாகம் இயக்க ஐடியா இருப்பதாக கூறியிருந்தார்.

இதில் முதலாவதாக ஜெயிலர் 2 உருவாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் நெல்சன் பிஸியாகிவிட்டதாகவும், இதன்மூலம் மீண்டும் ரஜினி, சன் பிக்சர்ஸ், அனிருத் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.