இந்தியா: தமிழ்நாடு
கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என நேற்றைய தினம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக ஐடி விங் செயலாளரும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
"கருணாநிதி எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும், அப்புறம் ... இருக்காது. மீண்டும் சொல்கிறேன், நாகரீக அரசியல் எல்லாம் இதுகளிடம் சரி வராது" என கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.